![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/istockphoto-1249801538-612x612-1.jpg?resize=612%2C408&ssl=1)
மாஹோ காவல்துறை பிரிவுக்குட்பட்ட பலகொல்லாகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன், தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பலகொல்லாகம – பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நபரொருவரைகூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டில் அவரின் மருமகனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (18) மாஹோ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மாஹோ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.