இலங்கைசெய்திகள்

களுவாஞ்சிகுடி கடற்கரையில் நடைபெற்ற சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு!!

tsunami

சுனாமி தாக்கமுற்று இன்று 17 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவாட்டத்தின் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமையப் பெற்றுள்ள சுனாமி நினைவுத் தூபியில் சுனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) அஞ்சலி செலுத்தப்பட்டது.

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மண்முனை தென்எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய குருக்கள் மு.அங்குசசர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செய்து உயிரிழந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

செய்தியாளர் – வ.சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button