இலங்கைசெய்திகள்

டீசலை விடுவிப்பதற்கு அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டது

டீசலை விடுவிப்பத்றகு டொலர் செலுத்த முடியாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் நேற்று இரவு (22) அமெரிக்க டொலர் செலுத்தப்பட்ட நிலையில் டீசல் விடுவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் 37500 மெற்றிக்தொன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

டொலர் செலுத்தப்படாத சந்தர்ப்பத்தில் டீசல் விடுவிக்கப்படாதிருந்த நிலையில், நேற்று இரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிசக்தி அமைச்சு செலுத்தியிருந்தமையினால் டீசல் விடுவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் டீசல் தரையிரக்கப்படுமென எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button