இலங்கைசெய்திகள்

மரம் வீழ்ந்து ஆசிரியர் பலி நுவரெலியாவில் பதற்றம்

நுவரெலியா தலவாக்கல்லை வீதியில் மரம் வீழ்ந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

தலவாக்கலை பிள்ளையார் ஆலயப்பகுதியில் அமைந்துள்ள மரத்தை இன்று (21) தறித்தபோதே மரம் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 
சம்பவத்தில் தலவாக்கலை தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் 37 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த மரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது என கோரி, பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button