இலங்கைசெய்திகள்

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் இல்லத்தை சுற்றி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாத நிலையில், கொழும்பின் சில பகுதிகளுக்கு நேற்றிரவு அமுல்படுத்துப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ,கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கே பொலிஸ் ஊரடங்கு சட்டம் நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button