இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக காலியில் போராட்டம்

காலியில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரிய போராட்டம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் நாளை (25) இடம்பெறவுள்ளது.

காலி பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நாளை மாலை 3.00 மணியளவில் இப்போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல், அரசாங்க அதிகாரிகளுக்கான எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்குமாறும், கடன் வரையறையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த மக்கள் போராட்டம் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button