கவிதைமுத்தமிழ் அரங்கம்.

நாளையுனதே – கவிதை!!எழுதியவர் – பளையூரான்

poem

இன்று உன்னோடு
இருப்பவர்கள் நாளை
இருப்பார்களோ தெரியா
இனிமையாய் பேசிய
இளம் வாலிபம் நெஞ்சு
இழிசொல்லால் பேசும்
இல்லை என்பவன்
இன்று இல்லாமலில்லை
இனியாம் இருப்பதும்
இல்லாமலிருப்பதும்
இயற்கையின் கையில்
இருக்கும் போதே
இழந்து வாழப்பழகு
இல்லார்க்கு இடு
இரசனையோடு வாழ்
இறப்பை நினைத்து
இன்று உன் கனவை
இழக்காதே நீ
இல்லாவிவ் உலகத்தை
இசைமீட்டி பாடாதே
இனி நீயே உலகம்
இறப்பின் நாள்
இன்றுதான் தெரிந்தும்
இறக்கையிழந்து பறக்கும்
ஈசலைப் போல் இரு
இதை நினைவில் வை
இரு கையால் இறை
இருள் நீக்கி ஒளியாகு
இகழ்வாரை விலக்கு
இலகுவில் எதுவும்
இரட்டிப்பாய் கிடைக்காது
இந்தநேரம்
இந்தநாள்
இனியெப்போதுமில்லை
இதுவரை நீ
இழந்தது போதும்
இளைஞனே எழு
இருவிழியில் உன்
இலக்கை அடை
இலவம் பஞ்சாய்
இறுதி வரை பற
இன்றில்லை நாளை
இறுதியாய் நீ வெல்வாய்….

Related Articles

Leave a Reply

Back to top button