இலங்கைசமீபத்திய செய்திகள்
யாழில் தொடரும் போதைப் பொருள் கைது வேட்டை – ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/1650639379-JAFFNA-2.jpg?resize=650%2C433&ssl=1)
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூவர் யாழ்ப்பாண பொலிஸரால் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை மணியந்தோட்டப் பகுதியில், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில், கணவனும் (வயது – 42), மனைவியும் (வயது -36) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6.8 கிராம் ஹெரோயின் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொக்குவில் பகுதியில் 2.5 ஹெரோயின் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.