இலங்கைசெய்திகள்

போதை மாத்திரைகளுடன் யாழில் ஒருவர் சிக்கினார்!

யாழ்., சுன்னாகம் – மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஏழாலை தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button