![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Screenshot_20220406_103447.jpg?resize=708%2C436&ssl=1)
நிலஅளவைத் திணைக்களத்தின் பணியாளர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு சம்மணங்குளம் கிராமஅலுவர் பிரிவிற்குட்பட்ட ஏம்பகுளத்தில் நில அளவைத்திணக்களத்தினர் நிலஅளவைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நிலஅளவைப் பணியாளராக பணிபுரிந்த நமசிவாயம் டிலக்சன் என்ற இளைஞர் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் முல்லைத்தீவு வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.