இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை பதவி விலககோரி தொழிற்சங்க போராட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலககோரி பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்க்கொள்ள உள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

காலத்தை வீணடிக்காமால் உடனடியாக ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யுமாறு வசந்த சமரசிங்க ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை பிற்பகல் 2.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் இந்த பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை பாரிய மக்கள் போராட்டமாக மாற்றுவோம் எனவும் சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button