![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Screenshot_20220206_092115.jpg?resize=708%2C551&ssl=1)
மன்னாரில் நேற்று (05) இடம்பெற்ற வீதி விபத்தில் 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் ஓலைத்தொடுவாய் பகுதியில் குறித்த விபத்துச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த மீன் கூலர் வாகனம் முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியது.
இதில், முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டது. இச்சம்பவத்தில் தாயாரான சந்தியோகு செல்வி (வயது 30), மகன்களான கெபின் கரன் (வயது 6), கானோர் (வயது 1) மற்றும் முச்சக்கரவண்டிச் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 6 வயதுடைய சிறுவன் கெபின் கரன் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.