![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/1597650036-Power-cut-2.jpg?resize=650%2C433&ssl=1)
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டு நாளையும் தொடரும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழரை மணித்தியால மின்வெட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.