இலங்கைசெய்திகள்

30 ஆயிரம் மில்லிமீட்டர் கசிப்புடன் பொன்னாலையில் பெண்ணொருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்குப் பகுதியில் 30 ஆயிரம் மில்லி
லீட்டர் கசிப்புடன் 35 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் சேன்றவேளை ஐவர் கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பொலிஸாரைக் கண்டதும் நால்வர் தப்பி ஓடியுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூவாயிரம் மில்லிமீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button