![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/images-5.png?resize=300%2C168&ssl=1)
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலி மாகல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.