இலங்கைசமீபத்திய செய்திகள்
இ.போ.சபை யாழ்.சாலை ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/IMG-20210301-WA0035-960x444-1.jpg?resize=708%2C327&ssl=1)
யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நேற்று முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.சாலையின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய அநுராதபுரசாலையைச் சேர்ந்த இ.போ.சபையின் ஊழியர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.