
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மன்னார் – பேசாலையில் இருந்து படகு மூலம் சென்ற இவர்கள், இந்தியாவின் மணல்தீடையில் தஞ்சம் அடைந்த நிலையில் தமிழகப் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.
தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் ஒருவர் முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டனர்
இவர்கள் மூவரும் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அறிந்து கொண்ட தமிழக பொலிசார் உடனடியாக மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.