
பெருமளவு இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையால் இத்தாலி தவித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாண்டு கால அடிப்படையில் வெளிநாட்டவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் நோக்கில் புதிய இடம்பெயர்வு கொள்கையை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் பெருமளவான இலங்கையர்கள் பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.